Wipro’s 
வணிகம்

2025-26ல் புதிதாக 12,000 பேருக்கு வேலை: விப்ரோ அறிவிப்பு!

2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான விப்ரோ வரும் ஆண்டில் 10,000-க்கும் அதிகமான புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சவுரப் கௌவில் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை 10,000- 12,000 என்ற அளவில் இருக்கும். நடப்பு நிதியாண்டின் 3 காலாண்டிலும் புதிதாக 7,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4-வது காலாண்டில் மேலும் 2,500 -3,000 பேர் பணியமர்த்தப்படுவர்.

மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனம் 24.5% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அடுத்த காலாண்டில் கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் சுமார் 20,000 பேரை புதிதாக பணியமர்த்தவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT