FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

Updated On : 3 மார்ச் 2025, 6:25 pm IST
ரூபாய் மதிப்பு - PTI
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று அதிகபட்சமாக ரூ. 87.41 காசுகள் வரை சரிந்தது.

Advertisement

Advertisement

எனினும் பிற்பாதியில் சற்று நேர்மறையாக இருந்தது. அதிகபட்சமாக ரூ. 87.25 காசுகள் வரை மதிப்பு உயர்ந்திருந்தது.

எனினும் வணிக நேர முடிவில் முந்தைய நாளின் ரூபாய் மதிப்பில் இருந்து 3 காசுகள் சரிந்து ரூ. 87.34 காசுகளாக வணிகம் நிறைவு பெற்றது.

ரூபாய் மதிப்பு - தினமணி

இன்றைய பங்குச் சந்தை வணிகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதும், வெளிநாட்டு நிதி வெளியேற்றமும் நிலையற்று இருந்ததும் முதலீட்டாளர்களிடையே உற்சாகமான போக்கை இன்று ஏற்படுத்தியது. இதுவே ரூபாய் மதிப்பு சற்று உயர்வதற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.16 புள்ளிகள் சரிந்து 73,085.94 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.024 சதவீதம் சரிவாகும்.

மெட்டல், ரியாலிட்டி, நுகர்வோர் பொருள்கள் துறை, ஐடி துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்த நிலையில், மீடியா, வங்கித் துறை, எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் எதிர்மறையாக இருந்தன.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments