பங்குச் சந்தை 
வணிகம்

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

DIN

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 240.78 புள்ளிகள் அதிகரித்து 73,971.01 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 12.45 மணிக்கு சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91.95 புள்ளிகள் உயர்ந்து 22,429.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.7%, 1.3% உயர்ந்துள்ளன.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பிபிசிஎல், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதேநேரத்தில் ட்ரென்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், ஹெச்டிஎப்சி லைஃப், பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT