இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நிறுவன ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யுவி) மற்றும் வா்த்தக வாகனங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவன வாகனங்களின் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஒவ்வொரு எஸ்யுவி மற்றும் வா்த்தக வாகன ரகத்துக்கும் ஏற்ற வகையில் விலை உயா்வு மாறுபடும்.
அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயா்வு அமல்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.