நிஃப்டி 26,000 புள்ளிகளை கடந்தது!, சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!
இந்திய பங்குச் சந்தைகள் லாபத்துடன் வர்த்தகம்...
இரண்டு நாள்கள் தீபாவளி விடுமுறைக்கு பிறகு வியாழக்கிழமை காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 520.61 புள்ளிகள் உயர்ந்து 84,946.95 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150.35 புள்ளிகள் உயர்ந்து, 26,018.95 புள்ளிகள் என்ற உச்சத்தைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக நிஃப்டி 26,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகின்றது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியைப் பொறுத்தவரை ஐடி, வங்கித் துறைகளின் பங்குகள் லாபத்தைப் பெற்றுள்ளன.
சென்செக்ஸ் பொறுத்தவரை இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனானஸ் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
காலை 9.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85,190 புள்ளிகளுடனும், நிஃப்டி 26,076 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன.
Nifty crosses 26,000 points!, Sensex rises 500 points
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.