செபி அறிவிப்பு எதிரொலி: உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
இந்திய பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்...
ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத்தின் பங்குகள் 1 முதல் 9.6 சதவிகிதம் வரை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.
வாரத்தின் கடைசி நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 82,749 ஆகவும், நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 25,358 ஆகவும் விற்பனையானது.
Advertisement
Advertisement
ஆனால், அதானி குழுமத்துக்கு சாதகமாக செபியின் அறிக்கையால், அந்த குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களின் பங்குகளில் அதிகபட்சமாக அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 9.6 சதவிகிதம் உயர்வுடனும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.4 சதவிகிதம் உயர்வுடனும் வர்த்தகமாகிறது.
குற்றச்சாட்டு என்ன?
பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் கூறியது. இது அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது தொடா்பாக விசாரணைக்கு ‘செபி’ உத்தரவிட்டது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட செபி, அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என அறிவித்தது.
While SEBI has declared Hindenburg's allegations false, Adani Group shares are trading profitably.
இதையும் படிக்க : ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.