பங்குச் சந்தைகள் 
வணிகம்

அமெரிக்கா - ஈரான் பதற்றம்! இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை உலகளவில் பங்குச் சந்தைகளை பாதித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கும்போது, 225.65 சரிந்து 82,272.49 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.80 புள்ளிகள் குறைந்து 25,406.55 புள்ளிகளில் வர்த்தகமானது.

இருப்பினும், காலை 10.40 நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் மீண்டு லாபத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 82,835.81 புள்ளிகளிலும், நிஃப்டி 25,573.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

இன்ஃபோசிஸ், எம் அண்ட் எம், டெக் எம், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட சென்செக்ஸின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

US-Iran tensions! Indian stock markets start with a decline!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் வெளியானது ஹாட் ஸ்பாட் - 2!

செவ்வாய் தோஷமா? தீராத நோயா?... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

ஓடிடியில் நேரடியாக வெளியான ஜிவி பிரகாஷின் லக்கி திரைப்படம்!

டாக்ஸிக் டீசர் வெளியானது!

Dinamani வார ராசிபலன்! | பிப். 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT