முகப்பு
வணிகம்

அமெரிக்கா - ஈரான் பதற்றம்! இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது பற்றி...

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:47 AM
பங்குச் சந்தைகள்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:33 AM

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை உலகளவில் பங்குச் சந்தைகளை பாதித்துள்ளன.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:37 AM

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கும்போது, 225.65 சரிந்து 82,272.49 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.80 புள்ளிகள் குறைந்து 25,406.55 புள்ளிகளில் வர்த்தகமானது.

இருப்பினும், காலை 10.40 நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் மீண்டு லாபத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 82,835.81 புள்ளிகளிலும், நிஃப்டி 25,573.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

இன்ஃபோசிஸ், எம் அண்ட் எம், டெக் எம், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட சென்செக்ஸின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

summary

US-Iran tensions! Indian stock markets start with a decline!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.