ஆர்பிஐ (கோப்புப் படம்) ENS
வணிகம்

ஜப்பானிய வங்கிக்கு ஆர்பிஐ ஒப்புதல்!

இந்தியாவில் முழு உரிமையுடனான ஒரு துணை நிறுவனத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளது ஆர்பிஐ.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியானது, ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் (SMBC) இந்தியாவில் முழு உரிமையுடனான ஒரு துணை நிறுவனத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

எஸ்எம்பிசி நிறுவனம், புதுதில்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தனது 4 கிளைகள் மூலம் இந்தியாவில் வங்கித் தொழிலை நடத்தி வருகிறது.

இந்தியாவில் உள்ள அதன் தற்போதைய கிளைகளை மாற்றி, முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைப்பதற்காகவே இந்த கொள்கை ரீதியான ஒப்புதலை வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2025ல், எஸ்எம்பிசி நிறுவனம், யெஸ் வங்கியில் 24.22% பங்குகளைப் கையகப்படுத்தி, அதன் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்தது. அதே நேரத்தில், எஸ்பிஐ வங்கியிடம் 10 சதவீதத்திற்கும் அதிகமான அதன் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Reserve Bank of India has granted in-principle approval to (SMBC) Japan, for setting up a wholly owned subsidiary in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT