முகப்பு
இந்தியா

நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ ஆளுநர் சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ ஆளுநர் இடையிலான சந்திப்பு...

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 11:39 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்திப்பு... - எக்ஸ்
பகிர்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேரில் சந்தித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப். 11) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

இத்துடன், மத்திய நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையிலான குழுவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

ஏற்கெனவே, கடந்த பிப். 1 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நிதியமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இடையிலான இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

summary

RBI Governor Sanjay Malhotra met Finance Minister Nirmala Sitharaman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments