முகப்பு
வணிகம்

உரிமை கோரப்படாத ரூ. 60,518 நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றிய பொதுத்துறை வங்கிகள்!

உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ. 60,518 கோடியை பொதுத்துறை வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றின.

Updated On : 24 மார்ச், 2026 at 2:51 PM
இந்திய ரிசர்வ் வங்கி
பகிர்:

புதுதில்லி: பல ஆண்டுகளாக எவ்வித பரிவா்த்தனையும் இன்றி உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ. 60,518 கோடியை பொதுத்துறை வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி பராமரிக்கும் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டதாக இன்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காப்பீட்டு நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ள உரிமை கோரப்படாத காப்பீட்டுத் தொகை பிப்ரவரி மாத இறுதியில் ரூ. 8,973.89 கோடியாகவும், செபி விதிமுறைகளின் கீழ் பரஸ்பர நிதிகளில் உள்ள உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு ரூ. 3,749.34 கோடியாகவும் இருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவைக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

சரியாக உரிமை கோருபவர்களை உரிய நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்து, தற்போதுள்ள உரிமை கோரப்படாத நிதியை, அதே வேளையில் புதிதாகச் சேரும் நிதி உள்ளிட்டவையும், குடிமக்களுக்கான உரிமை கோரும் செயல்முறையை எளிமையாக்கி, நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

summary

The unclaimed amount transferred by public sector banks to the DEA Fund of the Reserve Bank of India stood at Rs 60,518 crore at end-January 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.