தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 418

திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல்,

ஹரி கிருஷ்ணன்

திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல், நாயகி பாவத்தில் பாடப்பட்டது.  இறைவனை மயில் மீதில் ஏறி எப்போதும் வரவேண்டும் என்று கோரும் பாடல்.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 31 எழுத்துகள்; 1, 4, 7 ஆகிய சீர்களில் குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று.

தனனதன தான தத்த தனனதன தான தத்த
      தனனதன தான தத்த   -   தனதான

தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
         தழலமளி மீதெ றிக்கு   -     நிலவாலே
      தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
         தறுகண்மத வேள்தொ டுத்த -   கணையாலே      
வருணமட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்று
         மருவுமென தாவி சற்று   -     மழியாதே
      மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
         மயிலின் மிசை யேறி நித்தம் -  வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
         கலவிதொலை யாம றத்தி  -   மணவாளா
      கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
         கடியமல ராத ரித்த    -      கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
         அருணை நகர் கோபு ரத்தி -   லுறைவோனே
      அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
         அமரர்சிறை மீள விட்ட  -     பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT