கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் ராம்க்ருஷ்

கவிதைமணி
மணமுடிப்பது இல்லற வாழ்வில் நுழையவேகுணங்களறியுமுன் இல்லற சுகம் தொடங்கும்பணமெனும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்குண மாறுபாடுகளால் அது குடும்பப் போராகலாம்பொருள் குறைவே மனப் போரின் தொடக்கமாகிடஇருள்சூழும் மனதில் எதிரி யாரென்று தெரிவதில்லைசுருள் சுருளாகக் கவலைக் கம்பிகள் தடுக்கும் எங்கும்மருள் வந்து மனமெங்கும் சூழ வலியம்புகள் தைக்கும்ஒருபுறம் உண்ண உணவு உடுக்க உடை தேடலாகிஇருக்க வீடின்றி படும் தொல்லை எதிரிக்கும் வேண்டாஉருவான மகவுகள் கல்வி கற்கப் படும்பாடு ஏராளம்விரும்பும் பாடம், பணி கிடைக்கப் போராட்டங்களேதிருமண பந்தத்தில் இணைக்கப் படும்பாடும் பெரிதேவருமானம் செலவு என விழிபிதுங்கும் சண்டைகள்உருவாக்கப்படும் திருமண சண்டைகள் போர்க்களமேதருவாக வளராமல் வெட்டி வீழ்த்துவதும் வீரமேஉறவுகள் பிணைப்புகள் பாசத்தின் விளைநிலமானால்பறவையின் கூட்டு வாழ்க்கை பலன்தர ஏதுவாகும்கறவை மாடென அன்புப் பால் எப்போதும் சுரக்கும்மறவராய் வாழ்க்கையின் போர்க்களம் வெல்லலாம்வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வெற்றி என்பதுசூழ்ந்த சூழலை அன்பு மயமாக்கி அரவணைப்பதில்ஆழ்ந்த புரிதலில் பரிமாற்றங்கள் பரிணமிப்பதெனவாழ்வு வளமான பாதையில் செல்ல முயல்வதாகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT