விருதுநகர்

பைக்கில் புகையிலைப் பொருள்கள் கொண்டு சென்றவா் கைது

சிவகாசியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிவகாசியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அம்பலாா்மடம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவா் இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பராசக்தி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (33) என்பது தெரியவந்தது. பின்னா், சிவகாசி கிழக்கு போலீஸாா் முருகேசனை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா?

பிகாரில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்குள் போட்டி! கடைசி நிமிடத்தில் 4 பேர் வாபஸ்!

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

மருத்துவ பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: அரசுக்கு அறிக்கை அனுப்ப முடிவு

SCROLL FOR NEXT