சமையல் டிப்ஸ் ...
சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.
சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மசாலாவுடன் ஒரு தேக்கரண்டி அரிசிமாவையும் சேர்த்து அத்துடன் கிழங்கைப் போட்டு நன்கு பிசறிவிட்டு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.
தோசைமாவில் பச்சை மிளகாய் ஒன்றைக் கீறிப் போட்டு வைத்தால் மாவு எளிதில் புளிக்காமல் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா
பச்சைப் பட்டாணி அதன் இயல்பு நிறத்திற்கு வர வேண்டும் என்றால் அதை வேக வைக்கும் போது சிறிதளவு சர்க்கரையைத் தூவ வேண்டும்.