முகப்பு
மகளிர்மணி

வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் 

பாலிவுட் நடிகை சன்னிலியோன், கடந்த ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி நிஷா என்ற 21 மாத பெண்குழந்தையை தத்தெடுத்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 10:12 am IST
பகிர்:

பாலிவுட் நடிகை சன்னிலியோன், கடந்த ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி நிஷா என்ற 21 மாத பெண்குழந்தையை தத்தெடுத்தார். அதே நாளில் வெளிநாட்டு வாடகை தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்த சன்னிலியோன், தன் கணவர் டேனியல் வெப்பருடன் சேர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டார். கடந்த மார்ச் மாதம் நோவா மற்றும் அஷர் என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ள தகவல் இவர்களுக்கு கிடைத்தது. இது குறித்து சன்னி லியோன் கூறியதாவது, "எட்டு மாதத்திற்குள் எங்களுக்கு 3 குழந்தைகள் கிடைத்துவிட்டன. இப்போது நாங்கள் ஒரு முழுமையான குடும்பமாகிவிட்டோம். இது கடவுளாக பார்த்து எங்களுக்கு அளித்த செல்வங்களாக கருதுகிறோம். விரைவில் இரட்டை குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வரவுள்ளோம்'' என்றார்.
 - அ. குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.