விலகுகிறாரா முல்லை!
சின்னத்திரையின் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சின்னத்திரையின் பிரபல தொடர்களில் ஒன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இத்தொடர் தமிழ் ரசிகர்களைத்தாண்டி, தெலுங்கில் "வடிநம்மா', கன்னடத்தில் "வரலட்சுமி ஸ்டோர்ஸ்' என தென்னிந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. சுமார் 8 மொழிகளில் இத்தொடர் ஒளிபரப்பாவதே இத்தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தெரிவிக்கிறது.
இத்தொடரைப் பொருத்தவரை ரசிகர்களை கவர்ந்ததில் முக்கியகாரணமாக இருந்தவர்கள் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் ஆரம்பத்தில் முல்லையாக, நடிகை சித்ரா நடித்து வந்தார். அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததால், அவருக்கு பதிலாக, "பாரதி கண்ணம்மா'வில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா முல்லையாக நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் காவியாவுக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், போகப் போக ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில், காவியா "பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகவுள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காவியா, தொடரில் இருந்து விலகுவது குறித்து
அதிகார பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.