மகளிர்மணி

மோர் முறுக்கு 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

புளித்த மோர்-100 கிராம்
அரிசி மாவு- 400 கிராம்
பொட்டுக் கடலைமாவு- 100 கிராம்
கடுகு- 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், பொட்டுக் கடலை மாவு, சூடான எண்ணெய் ஒரு கரண்டிவிட்டு மாவை நன்றாகப் பிசைய வேண்டும். 

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் மாவை முறுக்கு அச்சில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு முறுக்காக வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT