ஏவுகணை பெண்!
இந்தியாவின் ஏவுகணை திட்டங்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்.
இந்தியாவின் ஏவுகணை திட்டங்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ். இந்தியாவின் ஏவுகணை பெண் என அழைக்கப்படுகிறார். கேரளாவின் ஆலப்புழாவில் 1963-ஆம் ஆண்டில் பிறந்தார். எம்.டெக், முடித்த டெஸ்ஸிதாமஸ் 1988-ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானியாக சேர்ந்தார்.
,அக்னி - 4 அக்னி - 5 ஏவுகணை திட்டங்களில் இயக்குநராக பணியாற்றியவர். ""பாலினம் முக்கியமல்ல, நீங்கள் விஞ்ஞானியாக பணியாற்றுகிறீர்கள் ஒரு பெண்ணாக அல்ல'' என குறிப்பிட்டவர் இவர்.