முகப்பு
மகளிர்மணி

நெற்றிப்  பொட்டு  சில டிப்ஸ்...

சாந்து பொட்டு  வைக்கும்போது பொட்டு வைத்த பிறகு முகப்பவுடர்  பூசிக் கொண்டால்  முகம் பளிச்சென தோற்றமளிக்கும்.  குங்குமப் பொட்டு இடும்போது  பவுடரை  முதலில்  பூசி விட்டு பிறகு பொட்டு  வைக்க வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சாந்து பொட்டு வைக்கும்போது பொட்டு வைத்த பிறகு முகப்பவுடர் பூசிக் கொண்டால் முகம் பளிச்சென தோற்றமளிக்கும். குங்குமப் பொட்டு இடும்போது பவுடரை முதலில் பூசி விட்டு பிறகு பொட்டு வைக்க வேண்டும்.

குறுகிய நெற்றியை உடையவர்கள் சிறிய பொட்டும், விசாலமான நெற்றியுடைய பெண்கள் பெரிய பொட்டும் வைத்துக் கொள்வது எடுப்பாய் இருக்கும்.

வட்ட முகமுள்ளவர்கள் நீள வடிவிலும், நீண்ட முகமுடையவர்கள் வட்ட வடிவிலும் பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.

சிவந்த நிறமுடைய பெண்கள் கருநிறப் பொட்டும், மற்ற பெண்கள் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறப் பொட்டும் இட்டால் அழகாக இருக்கும்.

நெற்றியில் பொட்டிட்ட பிறகு அதன் ஈரம் காய்வதற்குள் அதற்கென உள்ள ஜிகினாப் பொடியை மேலே தூவிவிட்டுக் கொண்டால் அழகாக இருக்கும்.

ஸ்டிக்கர் பொட்டை ஒரு நாளைக்கு மேல் உபயோகிக்க கூடாது. ஒரே பொட்டை பல நாட்கள் வைத்தால் தோல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நெற்றியில் ஒரே இடத்தில் தினமும் பொட்டு வைக்காதீர்கள். மேல், கீழ், வலது, இடது என அவ்வப்போது சிறிது நகர்த்தி வைத்தால் பொட்டு வைப்பதால் ஏற்படும் தோல் அலர்ஜி ஏற்படாது.
 

முழு கட்டுரையைப் படிக்க →