முகப்பு
மகளிர்மணி

கட்லெட் ருசிக்க...

சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருள்களையும் முதலிலே தயாரித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே சான்ட்விச் தயாரித்து விடலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருள்களையும் முதலிலே தயாரித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே சான்ட்விச் தயாரித்து விடலாம்.

அரிசியை கழுவி சுத்தப்படுத்தி வேக வைக்க தேவையான அளவு தண்ணீரில் கொட்டி வைத்து விடுங்கள். மறுநாள் சீக்கிரம் அரிசி வெந்து விடும்.     

உருளைக்கிழங்கை வேக வைத்து ஃபிரிட்ஜில் வைத்திருந்தால், தேவைக்கு எடுத்து உடனடியாக சமையலுக்கு பயன்படுத்தலாம்.

சமையலுக்கு தேவைப்படும் சமையல் பொடிகளை வீட்டில் தயாரிக்கலாம். ஆனால் ஆஸ்துமா போன்ற சுவாச தடை நோய் இருப்பவர்கள் வீடுகளில் சமையல் பொடிகளை தயாரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

முட்டைக்கோஸ் காரட் சீவியில் சீவினால் ஒரே சீராக அழகாக நறுக்கப்படும்.

பஜ்ஜிக்கு கடலை மாவு பிசையும் போது சிறிதளவு சமையல் சோடா சேருங்கள். பஜ்ஜி அதிகமான அளவு எண்ணெய்யை உறிஞ்சாது.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய்த் தூளும் சிறிதளவு சுக்குத்தூளும் கலந்திடுங்கள். சப்பாத்தி சுவை அதிகரிக்கும் கூடவே எளிதாக ஜீரணமாகும்.

வெஜிடபிள் கட்லெட்  தயாரிக்கும்போது சிறிதளவு தேங்காய் சேருங்கள். கட்லெட் அதிக ருசி தரும்.

ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேருங்கள். ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

ஜெல்லி சீக்கிரமாக பக்குவ நிலைக்கு வர வேண்டுமானால் அதனை 20 நிமிடம் ஃபிரீசரில் வைத்திடுங்கள். பின்பு ஃபிரிட்ஜின் தட்டில் வைத்திடுங்கள்.

ஜாம் தயாரிக்கும்போது அதில் அரை தேக்கரண்டி கிளிசரின் சேர்த்தால் அதிகமான அளவு சர்க்கரை (சீனி) சேர்க்க வேண்டிய நிலை ஏற்படாது.

ஜாம் கெட்டியாகிவிட்டால், அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம் சுடுநீரில் வைத்திடுங்கள் இளகி வந்து விடும்.

பால் சேர்த்து "புட்டிங்" தயாரிக்கும் போது "எவர்சில்வர்" பாத்திரம் பயன்படுத்துங்கள். அலுமினியப் பாத்திரம் பயன்படுத்தினால் நிற வித்தியாசமும் சுவை குறைவும் ஏற்படும்.

சர்க்கரை (சீனி) பாகு தயாரிக்கும் போது அதில் சிறிதளவு பால் சேருங்கள். பாகு கரிய நிறம் ஆகாது.

தோசை, இட்லிக்கு  ஓய்வு நாளில்  மாவு அரைத்து  ஃபிரிட்ஜில்  வைத்து விடுங்கள்  ஒரு வாரம்  வரை  இந்த மாவை பயன்படுத்தலாம். 

கடலை, பயறு வகைகளையும் முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து விடுங்கள். நேரம் மிச்சமாகும்

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பால் பவுடரும் கலந்தால், சப்பாத்திக்கு நல்ல சுவை கிடைக்கும்.

சப்பாத்தி மாவில் சிறிதளவு மோர், சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவை கலந்தால், சப்பாத்திக்கு வித்தியாசமான ருசி கிடைக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →