மருதாணியின் இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மையுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மையையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் அளிக்கக் கூடியது. மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தோல் வியாதிகளுக்கு இலைச்சாறு பயன்படுத்தப்படுகின்றன.
மலர்கள் தூக்கத்தைத் தூண்டக் கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்கும்.
மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல தூக்கம் வரும்.