பென்னே தோசா
இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இதுவும் கர்நாடக ஸ்பெஷல்தான். பென்னே என்றால் வெண்ணெய் என்பது பொருள்.
தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி- 2 கிண்ணம்
உளுந்து- கால் கிண்ணம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
வெண்ணெய்- கால் கிண்ணம்
மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கோஸ்- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
செய்முறை:
இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும், காய்கறிகள், உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வாணலியில் மாவை பெரிய தோசையாக ஊற்றவும். காய்கறி கலவையை பரவலாகச் சேர்க்கவும். பிஸ்ஸாவில் சேர்ப்பதுபோல இதை எடுத்து வைக்கவும்.
மற்றொரு தோசை ஊற்றவும். 1 தேக்கரண்டி வெண்ணெய் தடவவும். தோசை வெந்ததும் காய்கறி வைத்த தோசை மேல் வைக்கவும். இதன் மேல் 1 தேக்கரண்டி வைத்து சூடாகப் பரிமாறவும்.