மகளிர்மணி

கேரட் பச்சடி

வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

துருவிய கேரட்- ஒன்றரை கிண்ணம்

காய்ந்த மிளகாய்- 8

தனியா- 1 மேசைக்கரண்டி

பெருங்காயம்- தேவையான அளவு

கடுகு, புளி, உப்பு, எண்ணெய்- சிறிதளவு

வெந்தயம்- 1 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட்டை நன்றாக வதக்கவும்.

பின்னர், உப்பு, புளி சேர்த்து பச்சடி பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் வேண்டுமானால் சிறிது சேர்க்கவும். பின்னர், எண்ணெய்யை சூடாக்கி வெந்தயம், கடுகு தாளித்து பச்சடியில் கொட்டவும். சத்தான கேரட் பச்சடி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT