முகப்பு
மகளிர்மணி

பனீர் கட்லட்

ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து, அதில் மைதா சேர்த்து சிறு தீயில் இரு நிமிடங்கள் வைக்கவும்.

Updated On : 4 மே 2025, 12:11 am IST
பகிர்:

கோ.இனியா, கிருஷ்ணகிரி

தேவையான பொருள்கள்:

மைதா- 4 மேசைக்கரண்டி

Advertisement

Advertisement

பால்- 1 கிண்ணம்

மிளகு- அரை தேக்கரண்டி

பனீர்- 200 கிராம் (துருவியது)

எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

உப்பு- 2 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி

உருளைக் கிழங்கு- 5 வேகவைத்தது

பிரெட் தூள்- துருவியது சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து, அதில் மைதா சேர்த்து சிறு தீயில் இரு நிமிடங்கள் வைக்கவும். அதனுடன் பாலைச் சேர்த்துவிடாமல் இறக்கி பனீர் துருவலையும் உருளைக்கிழங்கு மசித்தது, பிறகு உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து உருண்டை பிடித்து, வடைகளாகத் தட்டவும். வடைகளை பிரெட் தூளில் புரட்டி பிரிட்ஜ்ஜில் சிறிதுநேரம் வைத்தெடுத்து பொரிக்கவும்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.