மகளிர்மணி

அல்வா புட்டு

இட்லி அரிசியை நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

சௌமியா சுப்பிரமணியன்

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி - 1/2 கிண்ணம்

நெய் - 2 1/4 கிண்ணம்

தேங்காய்த் துண்டுகள் - 1/4 கிண்ணம்

தண்ணீர் - 750 மி.லி.,

வெல்லம்- 1 கிண்ணம்

ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

இட்லி அரிசியை நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி தேங்காய்த் துண்டுகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றியவுடன் வெல்லம் சேர்த்து கரைய வைத்து, கொதித்தவுடன் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் 20 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.

மாவு நன்றாக இறுகி, கெட்டியான பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். ஒரு நெய் தடவிய தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும். அல்வா புட்டு தயார். நெய் சேர்க்காமலே தொண்டையில் வழுக்கி கொண்டு போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்ருட்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும்: நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன்

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 21 கலசங்கள் பொருத்தம்

தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்பு

களக்காடு வழித்தடத்தில் 15 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

கந்தசஷ்டி விழா: அக்கமாபேட்டை சுப்பிரமணியா் கோயிலில் ஊஞ்சல் உற்சவ சேவை

SCROLL FOR NEXT