குறள் பாட்டு: நன்றியில் செல்வம்
(பொருள் பால் - குடியியல் - அதிகாரம் 101 -பாடல் 1) வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக் கிடந்தது இல் - திருக்குறள் கோடி கோடி செல்வங்கள் மாடி மாடி வீடுகள் சேர்த்துப் பயனில்லையே பிற
(பொருள் பால் - குடியியல் - அதிகாரம் 101 - பாடல் 1)
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக் கிடந்தது இல்
- திருக்குறள்
கோடி கோடி செல்வங்கள்
மாடி மாடி வீடுகள்
சேர்த்துப் பயனில்லையே
பிறர்க்கு உதவ வேண்டுமே!
அடுத்தவரின் உழைப்பிலே
அதிகமாகப் பொருள் சேர்த்து
தனக்கும் பிறர்க்கும் உதவாத
செல்வம் பயனற்றதே!