ஆயிரம் கைகள் முளைக்கும்!
அறிவு மட்டும் இருந்து விட்டால் ஆயிரம் கைகள்
அறிவு மட்டும் இருந்து விட்டால்
ஆயிரம் கைகள்
முளைக்குமடா - உன்
அறிவில் ஆற்றல் கிடைத்து விட்டால்
அனைத்தும் நன்றாய்
நடக்குமடா!
அறிவாய் எதையும் செய்து வந்தால்
அமைதி உலகில்
தோன்றுமடா - பிறர்
அறிவை மதிக்கத் தவறி விட்டால்
அழிவே நம்மை
சூழுமடா!
அறிவு பெற்று வாழ்வ தொன்றே
அன்பு வாழ்க்கை
ஆகுமடா - நல்
அறிவை மறந்து விட்டால் இங்கே
அனைத்து துன்பமும்
சேருமடா!
அறிவே உலகை ஆளும் திறனை
அமைதி யாகப்
பெற்றதடா - உலக
அறிவைப் புரிந்து கொண்டால் போதும்
அனைத்து உயிரும்
வாழுமடா!