குறள் பாட்டு: வாழ்க்கைத் துணைநலம்
(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். -திருக்குறள் குடும்பம் நடத்தும் குணநலம் கொண்டு வாழும் மனைவிதான் மனையைச் சிறக்கச் செய்பவள் மகிழ்
(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2)
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
-திருக்குறள்
குடும்பம் நடத்தும் குணநலம்
கொண்டு வாழும் மனைவிதான்
மனையைச் சிறக்கச் செய்பவள்
மகிழ்ச்சி பெருக்கி வாழ்பவள்
நல்ல பண்பு மனைவிக்கு
இல்லை யென்று போய்விட்டால்
சிறப்பி ருந்தும் பயனில்லை
இழந்து போன வாழ்வுதான்.