முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: தீவினையச்சம்

(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். -திருக்குறள் தீய செயல்கள் வாழ்வினில் தீமையைத் திருப்பித் தந்திடும் பற்றவைத்த தீயைப் போல பற்றிப் பரவி எரிந்திடும்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:
(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

-திருக்குறள்

தீய செயல்கள் வாழ்வினில்

தீமையைத் திருப்பித் தந்திடும்

பற்றவைத்த தீயைப் போல

பற்றிப் பரவி எரிந்திடும்

தீயைப் போன்ற தீமைக்கு

அஞ்சி வாழ்தல் சிறந்ததே

தீமையில் கொண்டு தள்ளுவதே

தீய செயலின் தன்மையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.