முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

ஓய்வில்லாமல் பணிசெய்துஉயர்ந்த வழியில் பணிசெய்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:03 AM
பகிர்:

ஒப்புரவு அறிதல்

(அறத்துப்பால் - அதிகாரம் 22 - பாடல் 2)

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

-திருக்குறள்

ஓய்வில்லாமல் பணிசெய்து

உயர்ந்த வழியில் பணிசெய்து

சேர்த்த பொருள் எல்லாமே

சிறந்த வழியில் செலவிடு

தளர்ந்திடாத முயற்சியில்

சேர்த்துக் கொண்ட செல்வத்தை

உடல் தளர்ந்த ஏழைக்கு

உதவி செய்து பயன்படு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.