குறள் பாட்டு
ஓய்வில்லாமல் பணிசெய்துஉயர்ந்த வழியில் பணிசெய்து
ஒப்புரவு அறிதல்
(அறத்துப்பால் - அதிகாரம் 22 - பாடல் 2)
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.
-திருக்குறள்
ஓய்வில்லாமல் பணிசெய்து
உயர்ந்த வழியில் பணிசெய்து
சேர்த்த பொருள் எல்லாமே
சிறந்த வழியில் செலவிடு
தளர்ந்திடாத முயற்சியில்
சேர்த்துக் கொண்ட செல்வத்தை
உடல் தளர்ந்த ஏழைக்கு
உதவி செய்து பயன்படு.