நான்கு மை!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.
""என்னன்ன மை வேண்டும்?'' என்று என்.எஸ்.கே. கேட்டார்.
""திறமை, தனிமை, பொறுமை, பேனா மை என்ற நான்கு மைகள் வேண்டும்.''என கல்கி பதில் சொன்னதும், ""நீங்கள் சொன்னது மிகவும் அருமை'' என்று என்.எஸ்.கே சொன்னதும் அங்கு சிரிப்பலையின் "இனிமை' நிறைந்தது!