முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: ஊரையே விழுங்கும் பூதம்!

பரந்து விரிந்த பூதம் பரதவரை சுமக்கும் பூதம்

சிறுவர்மணி

கதைப்பாடல்: ஊரையே விழுங்கும் பூதம்!

பரந்து விரிந்த பூதம் பரதவரை சுமக்கும் பூதம்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

பரந்து விரிந்த பூதம்

பரதவரை சுமக்கும் பூதம்

உயிர் கோடி தந்த பூதம்

உரையே விழுங்கும் பூதம்! - எந்த பூதம்?

காடெல்லாம் ஊரும் பாம்பு

காட்டாற்றைக் கடக்கும் பாம்பு

ஊ..ஊ...என்று சீரும் பாம்பு

ஊரோரம் ஒதுங்கும் பாம்பு! - என்ன பாம்பு?

ஆலயத்தில் நிற்கும் யானை

அசையா திருக்கும் யானை

ஊர் கூடி இழுக்கும் யானை

வீதியுலா போகும் யானை! - எந்த யானை?

ஒற்றை மலர் பூக்கும் மரம்

ஒதுங்க நிழல் தாரா மரம்

உச்சி வேரைக் கொண்ட மரம்

ஊரெல்லாம் ஒளிரும் மரம்! - என்ன மரம்?

காயத்தில் மலரும் பூவாம்

கண்ணுக்குத் தெரியாப் பூவாம்

உன் என்னில் உள்ள பூவாம்

ஓர் நாளில் உதிரும் பூவாம்! - என்ன பூவாம்?

கருங்கடல்,...ரயிலு வண்டி...,

பெருந்தேரு...,மின்கம்பம்...,

உருவமில்லா உயிர்...,ஐந்தும்!

விடுகதைக்கு விடை இதுவே!

முழு கட்டுரையைப் படிக்க →