கதைப்பாடல்: ஊரையே விழுங்கும் பூதம்!
பரந்து விரிந்த பூதம் பரதவரை சுமக்கும் பூதம்
சிறுவர்மணிகதைப்பாடல்: ஊரையே விழுங்கும் பூதம்!
பரந்து விரிந்த பூதம் பரதவரை சுமக்கும் பூதம்
பரந்து விரிந்த பூதம்
பரதவரை சுமக்கும் பூதம்
உயிர் கோடி தந்த பூதம்
உரையே விழுங்கும் பூதம்! - எந்த பூதம்?
காடெல்லாம் ஊரும் பாம்பு
காட்டாற்றைக் கடக்கும் பாம்பு
ஊ..ஊ...என்று சீரும் பாம்பு
ஊரோரம் ஒதுங்கும் பாம்பு! - என்ன பாம்பு?
ஆலயத்தில் நிற்கும் யானை
அசையா திருக்கும் யானை
ஊர் கூடி இழுக்கும் யானை
வீதியுலா போகும் யானை! - எந்த யானை?
ஒற்றை மலர் பூக்கும் மரம்
ஒதுங்க நிழல் தாரா மரம்
உச்சி வேரைக் கொண்ட மரம்
ஊரெல்லாம் ஒளிரும் மரம்! - என்ன மரம்?
காயத்தில் மலரும் பூவாம்
கண்ணுக்குத் தெரியாப் பூவாம்
உன் என்னில் உள்ள பூவாம்
ஓர் நாளில் உதிரும் பூவாம்! - என்ன பூவாம்?
கருங்கடல்,...ரயிலு வண்டி...,
பெருந்தேரு...,மின்கம்பம்...,
உருவமில்லா உயிர்...,ஐந்தும்!
விடுகதைக்கு விடை இதுவே!