குறள் பாட்டு: பண்புடைமை
சிரித்து விளையாடும் நேரத்திலும்இகழ்ந்து பேசக்கூடாது
(பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 5 )
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடு அறிவார் மாட்டு.
- திருக்குறள்
சிரித்து விளையாடும் நேரத்திலும்
இகழ்ந்து பேசக்கூடாது
சிறுமை செய்து பேசுவது
துன்பம் தரும் செயலாகும்
உலக நிலைமை தெரிந்தவர்
பகைவரின் நல்ல குணத்தினைப்
பாராட்டித்தான் பேசுவர்
அதுவே நல்ல பண்பாகும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்