பொச்சாவாமை
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
பொருட்பால் - அதிகாரம் 54 - பாடல் 7
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
- திருக்குறள்
மறதி சோம்பலை மாற்றுவது
சுறுசுறுப்புக் கருவியே
செய்யமுடியாத செயலென்று
எதுவுமில்லை உலகிலே
ஐயோ எப்படிச் செய்வது
என்று எண்ணக் கூடாது
மலைத்து சோர்ந்து போகாமல்
செய்தால் அரிது ஏதுமில்லை
-ஆசி.கண்ணம்பிரத்தினம்