சிறுவர்மணி

நான் ஆற்றல் பெற்று மலர்ந்திடுவேன்!

சிறிய விதைக்குள் ஆலமரம் சிசுவாய் உள்ளே இருக்கிறது!அறிஞன் ஆகும் தகுதியெல்லாம் - இந்த 

பூதலூர் முத்து

சிறிய விதைக்குள் ஆலமரம் 
சிசுவாய் உள்ளே இருக்கிறது!
அறிஞன் ஆகும் தகுதியெல்லாம் - இந்த 
அரும்பின் உள்ளே இருக்கிறது!

மண்ணில் விழுந்த விதையெல்லாம் 
தண்ணீர் கிடைத்தால் கிளர்ந்தெழுமே!
அன்புத் தண்ணீர் ஊற்றுங்கள்! - நான் 
ஆற்றல் பெற்று மலர்ந்திடுவேன்!

"எதுவும் முடியும் உன்னாலே' 
என்று சொல்லி வளருங்கள்!
உதவும் கரங்கள் உன் கரங்கள் - எனும் 
உன்னத எண்ணம் பதியுங்கள்!

கதையில் கூட முன்னேற்றம்
காணும் கதையைக் கூறுங்கள்!
விதியைக் கூட வெல்கின்ற - நல் 
வித்தை தன்னைச் சொல்லுங்கள்!

துன்பம் எல்லாம் தூளாக 
துணிவைத் தந்து வளருங்கள்!
இன்பம் பெறலாம் உழைப்பாலே
என்பதை மனத்தில் விதையுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT