சான்றாண்மை
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்தலோ சால்பு.
பொருட்பால் - அதிகாரம் 99 - பாடல் 7
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தலோ சால்பு.
- திருக்குறள்
Advertisement
துன்பம் செய்த பேருக்கும்
நன்மை செய்வது நற்குணம்
செய்த துன்பத்தை நினைத்து
நன்மை செய்யத் தயங்காதே
இயல்பாகவே நல்ல குணம்
அமைந்தவர்கள் வாழ்க்கையில்
இயல்பாகவே நன்மை செய்யும்
எண்ணங்களும் அமைந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்