சிறுவர்மணி

முயன்றிடுவேன்

ஒருநாள் கூடத் தவறாமல்- நான்ஓடி வருவேன் பள்ளிக்கு!

பூதலூர் முத்து

ஒருநாள் கூடத் தவறாமல்- நான்
ஓடி வருவேன் பள்ளிக்கு!
ஒருநாள் வீட்டில் நின்றாலும் - அது
ஒழுங்கா நல்ல பிள்ளைக்கு?

என்னை வளர்க்க என் பெற்றோர்- தினம்
எல்லை மீறி உழைக்கின்றார்!
அன்பும் பண்பும் தருகின்றார் - நல்
அறிவும் ஒழுங்கும் துணை என்பார்!

என்னை உயர்த்த என் ஆசான் - நல்
இதயத் தோடு உழைக்கின்றார்!
"உன்னால் முடியும்' எனச் சொல்லி -நல்
ஊக்கம் அள்ளித் தருகின்றார்!

காலம் என்பது பொன்னாகும் - அதைக்
கண்ணாய்ப் போற்றிச் செயல்படுவேன்!
ஆலம் விதைதான் நான்இன்று - நாளை
ஆயிரம் பேர்க்கு நிழல் தருவேன்!

வீணாய் எதையும் பேசாமல் - நான்
வெற்றியை நோக்கிச் சென்றிடுவேன்!
தானாய் எதுவும் கிடைக்காது - அதனால்
தடைவந் தாலும் முயன்றிடுவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT