செய்ந்நன்றி அறிதல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
அறத்துப்பால் - அதிகாரம் 11 - பாடல் 8
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
- திருக்குறள்
ஒருவர் நமக்கு முன்னாளில்
செய்த உதவி தன்னை
என்றும் மறக்க வேண்டாம்
நெஞ்சில் வளர்த்துக் கொள்வோம்
Advertisement
நன்மையில்லாச் செயலொன்றை
தவறி அவர் செய்தாலும்
நன்றி மறப்பது நன்றல்ல
தவறை மறப்பது நன்றாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்