சிறுவர்மணி

பொங்கலைப் பாடுவோம்!

எஸ். ஆர். ஜி. சுந்தரம்

பொங்கல் அன்று புதியதாகும்
பல்லோர் இல்லமே!
மஞ்சள் கிழங்கு மண்ணில் பானை
மணக்கும் பொங்கலே!
செங்க ரும்பும் செழித்த தழையும்
சிரிப்பு காட்டுமே!
எங்கும் மக்கள் வாழ்த்து சொல்லி
எழிலாய்ச் செல்வரே!
பொங்கல் தினத்தின் முன்னால் வருமே
போகிப் பண்டிகை!
எங்கள் வீட்டின் முன்னாள் எரிப்போம்
பழைய பொருளினை!
பொங்கல் அடுத்து பின்னால் வருமே
மாட்டுப் பொங்கலே!
அங்கும் இங்கும் காளை கழுத்தில்
ஒலிக்கும் மணிகளே!
பொங்க லன்று பகல வனையே
போற்றி மகிழ்வோம்!
புதிய வண்ண ஆடை யணிந்து
பெரியோரை வணங்குவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேப்டன் விஜயகாந்தின் கனவை தேமுதிக நிச்சயம் நிறைவேற்றும்: தில்லி விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

வெண்குன்றம் மலையில் காட்டுத் தீ

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

மது போதையில் இடையூறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT