எங்க வீட்டுக் கொல்லையில்
எழுந்து நிற்குது வேப்பமரம்
எட்டுக் கிளிகள் அதன்மேலே
எழுச்சிக் கீக்கீ பாடுது!
எட்டு அடிகள் தள்ளியே
எழிலாய் நிற்குது மாமரமும்
ஏழு காகங்கள் அதன்மேலே
எடுத்துவிட்டன காக்காக்கா!
எங்கு இருந்தோ வந்தன
ஏராளமாய்க் கருமைக் குயில்கள்
எல்லாம் ஒன்று சேர்ந்தன
எங்கும் கீதம் ஒலித்தன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.