தெரியுமா..?
சிறையில் இருந்தபோது, பல பிரபலங்கள் நூல்களை எழுதியுள்ளனர்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:27 PM
சிறையில் இருந்தபோது, பல பிரபலங்கள் நூல்களை எழுதியுள்ளனர். அவற்றில் சில:
"கீதை ரகசியம்' என்ற நூலை திலகர் எழுதினார்.
"மெய்யறிவு', "மெய்யறம்', "மனம் போல் வாழ்வு' ஆகிய நூல்களை வ.உ.சி. சிறையில்தான் எழுதினார்.
தமது சுய சரிதையை சிறையில்தான் எழுதினார் ராஜேந்திர பிரசாத்.
"மணி மகுடம்' என்ற நாடகத்தையும், " சிறையில் பூத்த சின்னஞ்சிறு மலர்கள்' என்ற நூலையும் கருணாநிதி எழுதினார்.
அமெரிக்க மக்களுக்கு "சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்' என்ற நூலை பிரெஞ்சு நாட்டு சிறையில் இருந்தபோது, தாமஸ் பெயின் எழுதினார்.
"மெயின் கேம்ப்' என்ற நூலை "லாண்டஸ் பர்க்' சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதினார்.