ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகி, சாதனை படைத்திருக்கிறது.
இத்தகைய வியத்தகு சாதனைகளைப் படைத்தவர் எம்.ஜி.ஆர். தான். 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் இந்தத் திரைப்படங்கள் வெளியாகின.பிப். 4-இல் பத்மினி பிக்சர்ஸின் "நாடோடி' என்ற திரைப்படமும், சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. பின்னர், பிப்.18-இல் "முகராசி' என்ற படம் வெளியானது.
இவற்றில் "முகராசி' நல்ல வெற்றியைப் பெற்றது. "நாடோடி' சுமாரான வெற்றியைப் பெற்றது. "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.