ஞாயிறு கொண்டாட்டம்

முதல் படத்திலேயே முத்திரை

முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் பாடலாசிரியராக இடம் பிடித்துள்ளார் ஏ.இரமணிகாந்தன்.  "லைசென்ஸ்' படத்தின் மூலம் தன் அறிமுகப் பாடல்களை எழுதி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்.

தினமணி

முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் பாடலாசிரியராக இடம் பிடித்துள்ளார் ஏ.இரமணிகாந்தன்.  "லைசென்ஸ்' படத்தின் மூலம் தன் அறிமுகப் பாடல்களை எழுதி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்."துளிர்', "உள்ளொளி' உள்ளிட்ட கவிதை தொகுப்புகளின் மூலம் இவர் ஏற்கெனவே கவிதை உலகுக்கு பரிச்சயமானவர். தற்போது பாடலாசிரியராக தன் பயணத்தை தொடங்கியுள்ளார். 

""சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது.  இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். 

எல்லோருக்கும் நன்றிகள். கவிதை, பாடல் இரண்டும் நல்ல அனுபவம். சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். விரும்பி வந்த இடம்.ஆறுதலாக வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம்.  எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம்.
உன்னதமான நேரம் இது''  என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT