20 அறிஞர்களுடன் பயணம்...
ஒருமுறை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியூர் செல்வதற்காக, இருபது அறிஞர்களின் நூல்களை உடன் எடுத்துச் சென்றார். இதைக் கண்ட அவருடைய நண்பர், 'உடன் எடுத்துச் செல்லும் நூல்களைப் பயணத்தின்போது படித்து விடுவீர்களா?' என்று கேட்டார். இதற்கு வெ.இறையன்பு, 'நான் இருபது அறிஞர்களுடன் பயணம் செய்வதாக உணர்வேன்'' என்றார்.
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.