தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

முதுமக்கள் அன்றி முனிதக்கா ராயபொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்குறைத்து வீழும் கொடியருவி நன்னாட

தினமணி


முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குறைத்து வீழும் கொடியருவி நன்னாட
மன்றத்து மையல்சேர்ந்த தற்று. (பாடல்-209)

நிலைபெற்ற குன்றுகளினின்றும் வீழும் மின்னுக்கொடி போன்று விளங்கும் அருவிகளை உடைய நல்ல நாடனே! அறிவிற் சிறந்த சான்றோர் அல்லாமல், வெறுக்கத்தக்கவராகிய பொதுமக்களது பொல்லாத ஒழுக்கமாகிய அது, மன்றத்திலே நின்றபோது பித்தேறியது போன்றதாகும். பித்தேறியவர்களைக் கண்டு மன்றத்தார் யாவரும் அஞ்சி ஒதுங்குவதுபோல, சான்றோரும் கீழோரின் பொல்லாங்குகளைக் கண்டு அவரை விட்டு அஞ்சி விலகுவர். "மன்றத்து மையல் சேர்ந்த தற்று' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT