முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலர்ந்த பூக்கள் பூக்கும் வாய்ப்புள்ள நீர் நாடனே! தம்மால் இயன்ற பொருள்களை மனதார மற்றவர்க்குக் கொடுத்த நற்செயல்களால் புகழ் எனும் பெரிய பொருளைப் பெறுவர்.

Updated On : 16 ஏப்ரல், 2023 at 5:53 PM
பகிர்:

சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே, விரி பூ
விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்கு பவர்.    (பாடல்: 302)

மலர்ந்த பூக்கள் பூக்கும் வாய்ப்புள்ள நீர் நாடனே! தம்மால் இயன்ற பொருள்களை மனதார மற்றவர்க்குக் கொடுத்த நற்செயல்களால் புகழ் எனும் பெரிய பொருளைப் பெறுவர். சிறிய அயிரை மீனைத் தூண்டிலில் கோத்து அதன்வழிப் பெரிய வரால் மீனைப் பிடிப்பதற்கு நிகரான செயலாகும் அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.