பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
பிண்டியின் நீழற் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நூனூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன்துறை வெண்பா இவை.
(பழமொழி-த.சி.பா)
முன்துறை எனும் பகுதியை ஆளும் அரசன் அசோகமரத்தின் நிழலில் அமர்ந்து இருக்கும்
அருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி, நாட்டில் பண்டு தொட்டு வழங்கி வரும் நானூறு
பழமொழிகளைத் தெரிவு செய்து இனிமை உடையதாக நான்கு அடிகளில் அமைந்த நானூறு வெண்பாக்களை இயற்றினான். அவையே இவை.