வெள்ளிமணி

பரிவர்த்தன ராஜயோகம்!

இரண்டு கிரகங்கள் தங்களுடைய ராசிகளில் மாறி அமர்ந்திருந்தால், அதனை "பரிவர்த்தனை' என்கிறோம்.

தினமணி


இரண்டு கிரகங்கள் தங்களுடைய ராசிகளில் மாறி அமர்ந்திருந்தால், அதனை "பரிவர்த்தனை' என்கிறோம். உதாரணமாக, சூரிய பகவானின் வீட்டில் குரு பகவானும், குரு பகவானின் வீட்டில் சூரிய பகவானும் அமர்ந்திருந்தால் "பரிவர்த்தனை' என்று கூறுகிறோம். 

இத்தகைய நிலையில் இந்த கிரகங்கள் தாங்கள் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பலத்தையும் தங்களுடையதாக்கிக்கொண்டு இரட்டிப்பு பலத்துடன் செயல்படுவார்கள். மேற்கூறிய  உதாரணத்தில், சூரிய பகவான் குரு பகவானின் ஆதிபத்ய பலத்தையும், குரு பகவான் சூரிய பகவானின் ஆதிபத்ய பலத்தையும் தங்களுடையதாக்கிக் கொண்டு செயலாற்றுவார்கள்.

லக்ன சுப கிரகங்களுக்கு இடையே "பரிவர்த்தனை‘ உண்டானால், அது அந்த ஜாதகத்திற்கு மிகவும் நன்மையாக அமையும். இந்த கிரகங்களின் தசா புக்தி அந்தரங்களில் இந்த "பரிவர்த்தனை யோகம்' வேலை செய்யும். நீச்சமான வீட்டுக்கு அதிபதியான கிரகமும் நீச்சமடைந்து இருந்தால், அதை "நீச்ச பரிவர்த்தனை' என்கிறோம். அந்த கிரகங்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிவிடும். இதனை "பரிவர்த்தன ராஜயோகம்' என்றும் கூறுவார்கள்.

அனைத்து கிரகங்களும் ஏதோ ஒரு நட்சத்திரத்தின் மீது அமர்ந்திருப்பார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.  அத்தகைய கிரகம், அந்த கிரகத்தின் சாரத்தில் அமர்ந்திருக்கிறது என்றும், இதை "கிரகச்சாரம்' என்றும் அழைப்பர்.

உதாரணத்திற்கு, சூரிய பகவான் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திர சாரத்தில் சஞ்சரித்தாலோ, குரு பகவான், சூரிய பகவானின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலோ இதை "நட்சத்திர பரிவர்த்தனை‘ அல்லது "சார பரிவர்த்தனை‘ அல்லது "சூட்சும பரிவர்த்தனை' என்று அழைக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT