முகப்பு
உலகம்

ஏரிக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து :  சீனாவில் 17 பேர் பலி!

சீனாவில் இன்று காலை பேருந்து ஒன்று ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

Dinamani
Updated On : 2 டிசம்பர், 2016 at 12:34 PM
பகிர்:

பீஜிங் சீனாவில் இன்று காலை பேருந்து ஒன்று ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைத்துள்ளது மியொலிங் நகரம். அங்கு இன்று காலை 20 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவம் காலை  6 முதல் 7 மணிக்குள்  நடந்துள்ளது.

இந்த விபத்தில் பலியான 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பேருந்து நீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.