மிகப்பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 30 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சந்தைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி பயங்கரவாதிகள் வெடிக்க வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளும், பயங்கரவாதிகளை தேடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.